Saturday, September 5, 2015

திரைப்படங்கள் - 80களில்

திரைப்படங்கள்
===============


இதுவே ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு சாதனம்...அளவானது.

துபாய் (Dubai ) என்கிற வளைகுடா நாடுகள்.

துபாய் (Dubai )

இந்த மந்திரச்சொல் 30, 40 வருடங்களுக்கு முன் துபாய் என்ற ஊரை மாத்திரமல்லாது அனைத்து வளைகுடா நாடுகளையும் உள்ளடக்கியாதாக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ஒரு நாடு என்றால் அது மிகையல்ல..


இன்னும் சொல்வேன் துபாய் துபாய்...அதுவரை காத்திருங்கள்..


Friday, September 4, 2015

சாவி - திரைப்படம்

இது 1985 இல் வெளிவந்த திரைப்படம்...

இன்று சாவி திரைப்படம் பார்த்தேன்...சத்யராஜ், நிழல்கள் ரவி, சரிதா அனைவரின் நடிப்பும் நன்றாக இருந்தது...

இன்றைய வெள்ளிக்கிழமை நன்றாக பொழுது போனது...( 4.sep.15)

Monday, August 31, 2015

கடி ஜோக்ஸ் - முக நூலில் சுட்டது.

கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ் - தெரிந்துகொள்வோம்


1. டெய்லரும், பார்பரும் வெட்டி வெட்டி தான் சாம்பாதிக்கிறாங்க. அதனால அவங்களை வெட்டி வேலை செய்யறாங்கன்னு சொல்ல முடியுமோ...
2. பேப்பர் போடுறவன் பேப்பர் காரன். பால் போடுறவன் பால்காரன். தபால் போடுறவன் தபால்காரன்.... நான் கேட்கிறேன்.... அப்போ பிச்சைப் போடுறவன் பிச்சைக்காரனா?
3. என்னதான் நீங்க அகிம்சாவாதியாக இருந்தாலும், அமைதியை நேசிப்பவராக இருந்தாலும்.... சப்பாத்தியைச் “சுட்டு“தான் சாப்பிடனும்.
4. என்ன தான் “தி மு க“ காரர்கள் மாடுகளுக்குச் செல்லம் கொடுத்து ஆசை ஆசையாய் வளர்த்தாலும், அது “அம்மா“ என்று தான் கத்தும்.
5. நீங்க எவ்வளவு பெரிய கோபக்காரனாக இருந்தாலும், மகா வீரனாக இருந்தாலும், குளிர் அடிச்சாலும் கரெண்ட் அடிச்சாலும் உங்களால் திருப்பி அடிக்க முடியாது.
6. ரயில் எவ்வளவு தான் வேகமாகப் போனாலும் கடைசி பெட்டி கடைசியாகத் தான் போகும்.
7. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் சரி. அது தியேட்டரில் ரிலீஸ் ஆகாது.
8. தையல் போடுறாங்க என்பதற்காக டாக்டரை எல்லாம் டைலர்கள் என்று சொல்லக்கூடாது.
9. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்குத் தலையில கொம்பு முளைக்காது.
10. நான் கேட்கிறேன்.... கழுதை தேஞ்சி கட்டெரும்பானால், அது பேப்பர் சாப்பிடுமா? சர்க்கரை சாப்பிடுமா?
சும்மா ஒரு மாறுதலுக்காக..... யாரும் கல்லை எடுக்காதீங்க.... ப்ளீஸ்...

நம்மாழ்வார் - ஒரு பார்வை.

ஒரு நவீன காலத்தின் இயற்கை விவசாயத்தின் முன்னோடி...
இவரைப்பற்றி அறிய...இவரைப்பற்றி தாங்கள் அவசியம்  அறியவேண்டும்.

மேலும் இவர் தமிழக முதல்வர் அவர்களின் விருது பெற்றவர்.


சில தொடர்புகள்.


https://www.youtube.com/results?search_query=nammalvar+organic+farming+explained


search tips /tags = nammalvar, இயற்கை வேளாண்மை, நம்மாழ்வார், natural agricutlure.

சுய பரிசோதனை - ஒரு சின்ன கதை.

ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று
ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!
அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த
கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு
கொண்டிருந்தார்..!!
.
பையன்: "மேடம் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும்
வேலையை எனக்கு கொடுக்க முடியுமா.."?
.
பெண்மணி: (எதிர் பக்கத்தில் பேசுபவர்)
"எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து
வருகிறார்.."!!
.
பையன்: "மேடம் அவருக்கு கொடுக்கும்
சம்பளத்தில் பாதி சம்பளம்
கொடுத்தால் போதும். நான் உங்கள்
தோட்டத்தை பராமரித்து தருகிறேன்.."!!
.
பெண்மணி: "இல்லை இப்பொழுது
பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம்
நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில்
மிகவும் திருப்தி அடைகிறேன்."!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) மேடம் நான்
உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட
தருவேன்..!!
அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர
வேண்டாம்.."!!
.
பெண்மணி: "வேண்டாம்..! நன்றி".!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன்
ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.அந்த கடை முதலாளி அவனிடம்.,
"எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்'
தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர்
கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது..
நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா.."?
என்றார்.!
.
பையன்: "நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்"..!!
.
கடை முதலாளி: "இவ்வளவு நேரம் வேலைக்காக
மன்றாடிக் கொண்டிருந்தாயே.."?
.
பையன்: "இல்லை சார் நான் நன்றாக வேலை
செய்கிறேனா என்று தெரிந்து
கொள்ளத்தான் இப்படி
செய்தேன்..!!
எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும்
தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை,
அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி
செய்வேன்.. என்று கூறுவது
தற்பெருமை..!!
நம் திறமையை அடுத்தவர் புகழ் பாட வேண்டும்
அதுவே திறமை..!!


------------------------------------

இது வலையத்தில் சுட்டது.

என்னைப்பற்றி , என் நோக்கத்தைப்பற்றி


என்னிடம் தாங்கள் யாரும் அதிமேதாவித்தனமான விஷயங்களை எதிர்பார்க்காதீர்கள் ...நான் ஒரு சாதாரண தேடல் உள்ள மனிதனே...

நான் இந்த ப்ளாக்கை என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், என் வருங்கால சந்ததியினருக்கும் சமர்பிக்கிறேன் !!!

நான் வாழ்வியல் நிகழ்வுகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது முக்கயமான நிகழ்வுகளை பதிவு செய்யும் பொருட்டும் இதை உபயோகிக்கபோகின்றேன், தங்களின் மேலான ஆதரவுடன்.

மேலும் இது உங்களுக்கு கண்டிப்பாக முக்கியமாக ஒரு நல்ல பொழுது போக்கு தளமாக இருக்கும் என நம்புகிறேன்.